Header Ads

  • சற்று முன்

    புதுக்‌கோட்டை நேரு யுவகேந்திரா பள்ளி மாணவர்களிடையே தூய்மை இந்தியா தூய்மை பள்ளியை உருவாக்குவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்


    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்‌கோட்டை நேரு யுவகேந்திரா அமைப்பானது தூய்மை பாரதம் 2.0 என்னும் நிகழ்வினை மாவட்டம் முழுவதும் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மன்றங்கள் மற்றும் மகளிர் மன்றங்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக இலுப்பூர் விளாப்பட்டியில் செயல்பட்டு வரும் தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றமானது இன்றைய நிகழ்வாக தூய்மையான இந்தியா தூய்மையான பள்ளி என்னும் தலைப்பினில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஜெயராஜ் அவர்கள் வரவேற்று பேசினார். தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் சரவணக்குமார் நோக்கவுரை ஆற்றினார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் தூய்மை இந்தியா தூய்மையான பள்ளியினை உருவாக்குவோம் என்னும் நோக்கோடு தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  நிகழ்ச்சி முடிவினில் மன்ற உறுப்பினர் அழகர்சாமி நன்றி தெரிவித்தார். மன்ற உறுப்பினர்கள் தங்கவேலு , கருப்பையா, மூர்த்தி மற்றும் கார்த்திகேயன் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் திருமதி.தா.குளோரியா  திருமதி . அ. கவிதா  திருமதி. த. நவநீத  சுந்தரி திரு. மு. பிச்சைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்


    செய்தியாளர் : சக்திவேல் -புதுக்கோட்டை 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad