Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


    திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திரு வண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய வெளி மாநி லங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்ற னர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    மேலும் பவுர்ணமி நாட் களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் கார்த்திகை தீப விழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் போன்றவை முக்கிய விழாக்களாகும்.

    இக்கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 12.55 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், இரவு பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும், பராசக்தி அம்மன் திருவீதியுலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர். 


    செய்தியாளர் : திருவண்ணாமலை  மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad