Header Ads

  • சற்று முன்

    மதுரை மாநகர காவல் துறைக்கு “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம்


    காவல்துறையினர்   ஸ்மார்ட் ஈ-சலான்  POS (Point of Sale) இயந்திரம் மூலமாக இரசீது உடனுக்குடன் வழங்கப்படுகின்றது.

    *மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு  ஈ-சலான் மூலமாக ரசீது வழங்கப்பட்டு அதற்கான அபராத தொகையை பொதுமக்கள் SBI BANK, POST OFFICE , இ- சேவை மையம்,  கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக  செலுத்தலாம் மற்றும் mparivahan portal மூலமாக Payment Option –யை தேர்வு செய்து இணைய வங்கி கணக்கின் மூலமாகவும்  செலுத்தலாம். 

    *இந்த ‘ஸ்மார்ட்’ ஈ-சலானின் முக்கிய நன்மைகள் என்னவென்றால் போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுபவர்களை எளிதில் கண்டறியமுடியும்.

    *காவல்துறையினர் ஒரு வாகன பதிவு எண்ணைக்கொண்டு வாகனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதையும்,  அந்த வாகனம் திருட்டு வாகனமா என்பதையும் மற்றும் அந்த வாகனம் ஏதேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்பதையும் எளிதில் அடையாளம் காண முடியும்.

    * மேலும் இந்த இயந்திரத்தில் வாகன ஓட்டுனர் உரிமத்தில் உள்ள பதிவு எண்ணை பதிவு செய்தவுடன் ஓட்டுநர் உரிமம் உண்மையானதா அல்லது போலியானதா எனவும் எளிதில் கண்டறியமுடியும்.

    * “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம் மூலம் கொடுக்கப்படும் ரசீதில் உள்ள குற்றவிவரங்கள் அனைத்தும் இணையதளத்தின் மூலமாக உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். 

    *போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அதற்கான  அபராத தொகையை மூன்று மாதத்திற்குள் செலுத்த தவறினால் அவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    * “ஸ்மார்ட்’ ஈ-சலான்” இயந்திரம் மதுரை மாநகரில் போக்குவரத்து காவல்துறையினருக்கு 25 இயந்திரங்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கு 7 இயந்திரங்களும் மொத்தம் 32 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.


    செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad