Header Ads

  • சற்று முன்

    காஷ்மீர் மாநிலத்தில் 370 மற்றும் 35a சட்டத்தை ரத்து செய்ததை திருவண்ணாமலையில் ஹிந்து முன்னணியினர் கொண்டாடினர்.


    காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்ததை ஹிந்து முன்னணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    காஷ்மீர் மாநிலத்தில் 370 மற்றும் 35a சட்டத்தை ரத்து செய்ததை ஹிந்து முன்னணியினர் கொண்டாடினர். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது இதனை கொண்டாடும் விதமாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் முன்பாக இந்து முன்னணியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வழங்கியும் கொண்டாடினர்.ஹிந்து முன்னணியின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றான ஒரே நாடு ஒரே இந்தியா என்கின்ற குறிக்கோளுக்கு வலு சேர்க்க கூடிய வகையில் அமித்ஷா அவர்களின் சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை  நாங்கள் வரவேற்கின்றோம் என்று ஹிந்து முன்னணியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அருண் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    A.M.செந்தில், மாவட்ட செயலாளர், இரா அருண் மாவட்டச் செயலாளர் , A   துரைராஜ், நகர பொதுச் செயலாளர் ஆகியோர் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad