Header Ads

  • சற்று முன்

    ஜோலார்பேட்டையிலிருந்து குடி தண்ணீர் வேகனிலில் கொண்டுவருவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது


    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிட்டது அதனடிப்படையில் தென்னக ரயில்வே அதிகாரிகள் சென்னை மெட்ரோ துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துறையினர் ஜோலார்பேட்டையில் மூன்று கட்ட ஆய்வுகள் மேற்கொண்டனர் அதன்பின் ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டு  சக்கர குப்பத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வரை 3.5 கிலோ மீட்டருக்கு புதிய குடிநீர் பைப் லைன் அமைத்து ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது

    இந்தப் பணி கடந்த மாதம் 25ஆம் தேதி துவங்கப்பட்டது இரவு பகல் என்று பாராமல் கூட பணி மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஜோலார்பேட்டை நகராட்சியில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றது இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து  வரவழைக்கப்பட்டு ரயில் வேகண்களில்  ஜோலார்பேட்டை இருந்து 2.5 மில்லியன் லிட்டர் 50 வேகன்ங்களில் நாள்  ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் 4  தவணையில் கொண்டு செல்ல அதற்கான சோதனை ஓட்டம் 4 கட்டங்களாக  நடைபெற்று  50 வேகண்களில் தலா  25 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் நிறப்பப்பபட்டு பின்னர்  ஜோலார்பேட்டை இருந்து சென்னைக்கு வில்லிவாக்கம் த்திர்க்கு  செல்ல  தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல இயக்குனர் மகேஷ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad