Header Ads

  • சற்று முன்

    சென்னை ராயபுரம் சாலையில் 10அடி ஆழம் திடீர் பள்ளம் பொது மக்கள் பயணிகள் அதிர்ச்சி


    சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சாலையில் திடீரென்று 10 அடியில் பள்ளம்  ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கழிவு நீர் வழி தடத்தில் இப்பல்லமா ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

    பள்ளத்தை மூடுவது தொடர்பாக மாநகராட்சி குடிநீர் வாரிய விவேகானந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளத்தை மூடுவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரம் மூலமாக பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad