Header Ads

  • சற்று முன்

    குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி பயன்படுத்தி வந்த வீடுகளில் இருந்து மோட்டார்கள் மீட்ப்பு கடலூர் பெரு நகராட்சி அதிரடி நடவடிக்கை


    கடலூரில் நகராட்சி குடிநீர் குழாய்களில் இருந்து  சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி பயன்படுத்தி வந்த வீடுகளிலிருந்து 50 .க்கும் மேற்ப்பட்ட மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது இதனால் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது இந்நிலையில் கடலூரில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது மேலும் நிலத்தடி நீரும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் எலக்டிரிசன் முருகவேல் மணி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாமோதரன் ஆகியோர் கடலூர் பாலாஜி நகர் லட்சுமி நகர் மற்றும் வண்டிப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி 50.க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பறிமுதல் செய்தனர் இதேபோல் மற்றொரு முறை மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பது தெரியவந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad