Header Ads

  • சற்று முன்

    திருவாடானை நீதிமன்ற வளாக பின் புறத்தில் திருடிய இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை மர்ம நபர்களுக்கு வலை வீச்சு


    திருவாடானையில் மர்ம மனிதர்கள் இரண்டு சக்கர வானத்தை திருடி நீதிமன்றம் பின்புறம் மறைவான இடத்தில் வைத்து பிரித்து உதரிபாகங்களை விற்க இருந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் தப்பி ஓட்டம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே ஆதியூர் கிராம்மத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(55) இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி ஆவார். இவர் கடந்த 16ம் தேதி ஞாயிற்று கிழமை ஆதியூர் சாலை ஓரத்தில் இரவு 7 மணியளவில் நிறுத்திவிட்டு வயல்காட்டிற்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்தில் காணாத்து கண்டு அதிர்ச்சியுற்று அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்தும் கிடைக்க வில்லை. இந்நிலையில் அவரும் அவரது உறவினர்களும் தேடிப்பார்த்தனர். அப்போது சிலர் திருவாடானை நீதிமன்றம் பின்புறம் உள்ள வயல் காட்டு பகுதியில் சிலர் இந்த வாகத்தை கொண்டு வந்த்தாகவும்  கூறியதை தொடர்ந்து போய் பார்த்தனர். அப்போது அந்த இரண்டு சக்கர வாகணத்தை தனித்தனியாப பிரித்து உதரி பாகங்களாக மாற்றி சக்கரத்தை ஒரு இடத்திலும், முகப்பு பகுதிகளை ஒரு இடத்திலும், பெட்ரோல் டாங் ஒரு இடத்திலும் பிரித்து  போட்டு  ஓலைகளை வைத்து மறைத்து வைத்திருந்த விவரம் தெரிந்தது. உடன் திருவாடானை காவல் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் கொடுத்த தகவலின் படி போலீசார் வாகனத்தை திருடி பிரித்த மர்ம மனிதர்களை தேடிவருகிறார்கள். உதிரி பாக்ங்களை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad