Header Ads

  • சற்று முன்

    சிவகங்கை காரைக்குடி அருகே சுடுகாட்டில் இருதரப்பினரிடையே மோதல்


    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில் சுடுகாட்டு பகுதியில் ஒரு தரப்பினர்  இடம் பிடித்து கல் ஊண்டி உள்ளர் மற்றொரு தரப்பினர் அந்த கல்லை உடைத்துள்ளனர் இது  தொடர்பாக இரு சமுதாயத்தினரும் போலீசில் புகார் தெரிவித்த நிலையில்  ஒரு தரப்பினர் (முத்திரையர் ) முன்னாள் MLA தம்பி வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அடித்து வீடு மற்றும் காரை சேதப்படுத்தி சென்று விட்டனர் சம்பவம் கேள்வி பட்ட மற்றொரு பிரிவினர் (வல்லம்பர் ) ஒன்று கூடி அந்த பிரிவினரின் வீடுகளுக்கு சென்று அவர்களை அடித்து வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர் . கலவரம் அதிகமாகவே சிறிதளவு இருந்த  போலீசாரல் நிலமையை கட்டுப்படுத்த முடியவில்லை .அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டு இரு பிரிவினரையும் கலைந்து போக வைத்து மின்சாரத்தை துண்டித்தனர .இருந்தாலும் இரு பிரிவிரைின் மோதல் போக்கு அதிகமாக ஒரு கட்டத்தில் போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது . அமைதியாக இருந்த போலீசார் மீது மீண்டும் கல்வீசப்பட்டதும் வெகுண்டடெழந்த போலீஸ்   தடியடி நடத்தி மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர் . மேலும்  ஒரு வீட்டில் பதுங்கிஇருந்த கலவரக் கார்களை கதவை உடைத்து 20க்கும் மேற்பட்டவர்களை ரவுண்டு கட்டி  அடித்து கைது செய்தனர்
    இதோ போல மற்றொரு பிரிவினர் வீடுகளுக்குள் புகுந்த போலீசார் பதுங்கியிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை தடியடி நடத்தி  கைது செய்தனர் .சம்பவ இடத்திற்கு மாவட்ட SP ஜெயசந்திரன் வருகை தந்து விசாரனை மேற்கொண்டு இரு தரப்பினரையும் கைது செய்ய உத்தரவிட்டார் . தடியடி நடந்த  பகுதியில்  இரவு  முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போலீசார் கைது  வேட்டை நடத்தினர் என்றே கூறலாம் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad