Header Ads

  • சற்று முன்

    குடும்ப தகராறில் மதுபோதையில் இருந்த கணவர் மனைவியை அரிவாளால் வெட்டியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


    எட்டயபுரம் நடுவிற்பட்டி ஆறுமுக முதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (35). கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர். இன்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்த கருப்பசாமிக்கும் அவரது மனைவி முனீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கருப்பசாமி மனைவி முனீஸ்வரியை அரிவாளால் தலையின் பின்பக்கம் மற்றும் காதுப்பகுதியில் வெட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரி வீட்டிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக எட்டயபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கருப்பசாமியை தேடி வருகின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad