Header Ads

  • சற்று முன்

    தனியார் பேருந்து பசு மாட்டின் மீது மோதியதில் பசு மாடு பலத்த காயம்


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை தீ அணைப்பு நிலையம் அருகே கைகாட்டி நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பேருந்து ( பேருந்து எண் TN 72 J 9699 ) தொண்டி மதுரை ரோட்டில் வந்த பசு மாட்டின் மீது மோதியதில் பசுமாடு காயமடைந்து ரோட்டில் சாய்ந்தது. சம்பவ இடம் வந்த தீ அணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாண்டியராஜன் தலைமையில் பசு மாட்டை மீட்டனர். உடன் தகவலறிந்து வந்த திருவாடானை அரசு கால்நடை மருத்துவர் நதியா காயமடைந்த பசு மாட்டிற்கு உரிய சிகிச்சையளித்தார். பின் மாட்டின் உரிமையாளர் சூச்சனி கிராமத்தை சேர்ந்த ராமு மகன் ராமநாதன் (55) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பே௹ந்து ஓட்டுநர் ராஜபாலையம் வடக்கு தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முத்துராமலிங்கம் (41) என்பவர் தான் என்பது தெரிய வந்தது.

    பசு மாட்டின் உரிமையாளும் , டிரைவரும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக சென்றாகள் அதனால் வழக்கு பதிவு செய்யாமல் தவிர்க்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad