தமிழக பண்பாட்டுக்கழகம் சார்பில் கலை,கல்வி சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது
தமிழக பண்பாட்டுக்கழகம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அதாவது கல்வி பணியில் நல்லாசிரியர்கள், திரை துறையில் சிறந்து விளங்கிய திரை நட்சத்திரங்களுக்கு ராஜகலைஞன் என்கிற விருதினையும்,தங்கப்பதக்கம், மற்றும் நற்சான்றிதழ் கடந்தை .05.05.19 அன்று திருச்சி ரெத்தினவேல் தேவர் மன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.
தொழிலதிபர் Rtn.Dr .M.K.M. உஸ்மான் சாஹிப் தலைமையில் சிறந்த கலை சேவைக்கு R.சுந்தராஜன்,சின்ன திரைகளில் சிறந்து விளங்கிய பூவிலங்கு மோகன், சிறந்த திரைப்பட மற்றும் நாட்டுப்புற பாடல் சின்ன பொண்ணு குமார் அவர்களுக்கும் சென்னை மாவட்ட prof. கந்தசாமி நடுநிலை பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற கலிங்கத்துப் பரணி உரை எழுதிய ஆ.வீ.கன்னையா நாயுடு அவர்களின் கொல்லு பெயர்த்தியான செல்வி ஆ.வீ. இராதிகா தேவி அவர்களுக்கு விருதினையும், பதக்கத்தையும் வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு Dr.S.N. ஜாகிர் உசேன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் C.S.ரவி விழா இறுதியில் நன்றியுரை வழங்கியவர் வழக்கறிஞசர் M. ஜோசுபால்ராஜ்
கருத்துகள் இல்லை