Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் தாலுகா அலுவலக வளாகத்தில் மின் திருட்டு, கண்டுகொள்ளாத மின்சாரவாரியம்


    திருவாடானை தாலுகா அலுவக வளாகத்தில் உள்ள  கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி கழிப்பறை கட்டிடத்திலிருந்து  இருந்து திருட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வரும் நிலையில் தாலுகா அலுவலக பெயர் பலைகைக்கும் இதிலிருந்து மின்சாரம் எடுத்து மின்சாரவாரியத்திற்கு வருவய் இழப்பை ஏற்படுத்தி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலக வளாகத்திற்குள் ஏற்கனவே நீதிமன்றம் செயல்பட்டு வந்த போது சிறிய சிமின்ட் ஓட்டு கொட்டகை அமைத்து அதில் வழக்கறிஞர் சங்கம் செயல்பட்டு வந்தது.

    அதற்கு அருகில் திருவாடானை ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட கழிப்பறை செயல்பட்டு வந்த நிலையில் பல வருடங்களாக பூட்டி கிடக்கிறது. நீதிமன்றம் புதிதாக திறக்கப்பட்ட பிறகு. வழக்கறிஞ்ஞர்  சங்க கொட்டகையை தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் திருவாடானை அதில் தெற்பொழுது வரை செயல்பட்டு வரும் நிலையில் அருகில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கழிப்பறை கட்டிடத்திலிருந்து  சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பை பெற்று இரண்டு மின்விசிறி மற்றும் இரண்டு டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது.  இது பற்றி திருவாடானையில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது அதை கண்டுகொள்ளவில்லை. 

    இதே ஒரு தனி மனிதன்  செய்திருந்தால் மின்சாரவாரிய அலுவலர்கள் இது திருட்டுதனமான எடுக்கப்பட்டது என்று கூறி அதற்கு தண்டணை தொகை செலுத்த செய்வார்கள். ஆனால் அதிகாரிகள் இவ்வாறு வேறு கட்டிடத்தில் இருந்து எடுத்து மின்சாரத்தை பயன்படுத்தி அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துலது எவ்வகையில்சரியாகும் என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் இந்த திருட்டு மின்சாரத்தில் இருந்து எடுக்கப்பட்டு திருவாடானை வருவாய் வட்டாச்சியர் மற்றும் குற்றவியல் நடுவர் என்று சுற்று சுவரில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைக்கு விளக்கு எரிகிறது. சட்டத்தை மதிக்க வேண்டிய அதிகாரிகளே இவ்வாறு நடந்துகொண்டால் யார் இவர்கள் மீது நட்வடிக்கை எடுப்பது. இதற்கு திருவாடானை மின்சாரவாரிய ஊழியர்கள் உடந்தையாக உள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இதற்கு திருவாடானையில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பார்க்கும் அலுவலர்களை இடமாறுதல் செய்தால்தான் இது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்கள்.

    செய்தியாளர் : ஆனந்த் குமார் - திருவாடானை  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad