மாநகராட்சி குடிநீர் பொது மக்கள் தேவைக்கா அல்லது குடி மகன்களின் தேவைக்கா
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் பெருமாள் கோவில் அருகே டி பி கே ரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு வாயிலில் மாநகராட்சி குடிநீர் தொட்டி அமைக்கபட்டுள்ளது மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் பெருமாள் கோவில் அருகே டி பி கே ரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு வாயிலில் மாநகராட்சி குடிநீர் தொட்டி அமைக்க பட்டுள்ளது
இந்த குடிநீர் தொட்டியில் பொது மக்கள் யாரும் பிடிப்பதில்லை. அரசு விற்பனை செய்யும் மதுபானக் கடையில் உள்ள பாரில் தேவைக்கு பயன்படுகிறது. மேலும் போதை தலைக்கு ஏறிய குடிமகன்கள் தண்ணியை போட்டுவிட்டு தண்ணீர் தொட்டி அடியில் படுத்து பிரளுகின்றனர். இதனால் பொது மக்கள் யாரும் தண்ணீர் பிடிப்பதற்கு அஞ்சுகின்றனர். மேலும் 20 லிட்டர் கேனில் பிடித்து பாரில் பயன்படுகின்றனர். இது குறித்து மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்துள்ளனர்.குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பல முறை புகார் தந்துள்ளனர்.
செய்தியாளர் : காளமேகம் - மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை