மனித கழிவுகளை மனிதரே அள்ளும் அவலம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் தேசிய நெடுஞ் சாலையில் தனியார் உணவு விடுதி இயங்கிவருகிறது.இந்த உணவு விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுகளை மனிதரே அள்ளி சாலையில் கொட்டும் அவலம் அரங்கேறியுள்ளது.மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது அதையும் மீறி இவர்கள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அல்ல விட்டு மேலும் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் சாலையிலேயே இந்த நீரை ஊற்றி உள்ளார்கள் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது மேலும் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அந்த உணவு விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
செய்தியாளர் : மதுரை - காளமேகம்
கருத்துகள் இல்லை