Header Ads

  • சற்று முன்

    சிவகங்கை அருகே வெள்ளி ரத உற்ச்சவம்.

    சிவகங்கை மாவட்டம் நடராசன்கோட்டை அருள்மிகு  கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு நிகழ்ச்சி யாக , வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப் பட்டுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக , நேற்று இரவு அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தது சிறப்பானது.முன்னதாக பக்தர்கள் மத்தியில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபட்டனர்.பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad