போக்குவரத்து ஆய்வாளருக்கு மருத்துவ சிகிக்சை - வாகன ஓட்டுனருக்கு கொலை வழக்கு பதிவு
ராமநாதபுரம் எவரெஸ்ட் ஜுவெல்லரி எதிரில் மதியம் பகல் 1.00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் என்பவரை TN 65 AC 9379 சரக்கு வாகனம் ( டாடா ACE) வாகனத்தை கர்ணனான் என்பவர் ஒட்டி வந்தார். வாகன ஆவணங்களை சோதனை செய்த போக்குவரத்து ஆய்வாளர் வழக்கு பதிவு செய்யாமல் வாய் தகராறில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் கைதகரராக மாறி ஒருவரை ஒருவர் கட்டி புரண்டு நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டனர். இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந் கழுத்து பகுதியில் கடித்து கொதறியதால் 5 தையல் போடப்பட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். மேற்படி கர்னணனுக்கு பஜார் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை