Header Ads

  • சற்று முன்

    வேலூரில் காரில் வந்து மது விற்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்


    வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    காக்கங்கரை, நடுபட்டு ஆகிய பகுதிகளில், காரில் வந்து போலி மதுபானம் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஏரியூர் கிராமத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறிய அறை அமைத்து, அங்கு போலி மதுபானங்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் 1000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக கடந்த 6 மாதங்களாக போலி மதுபானம் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, திருப்பத்தூரை சேர்ந்த மனோகரன், கோவிந்தராஜ், சரவணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad