Header Ads

  • சற்று முன்

    ஜம்புநாதபுரம் கிராமதில் பிரசாரம் மேற்கொள்ளும் போது வேட்பாளர் பாரி வேந்தற்கு சிறப்பான வரவேற்பளித்தனர்


    உங்களது பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்கள் ஊருக்கு வரவில்லை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது ஆனால் நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்

    இது முக்கியமான தேர்தல் டெல்லியில் யார் இருப்பது யார் ஆள்வது என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ்  கட்சி ஆகிய இரண்டில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் மோடி  பிரதமரான பிறகு கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக கூறினார் ஆனால் ஒருவர் கணக்கில் கூட 15 ரூபாய் கூட வரவில்லை அது போன்று நாட்டில் அரிதாக உள்ள வேலை வாய்ப்பு திட்டத்தை கையில் எடுத்து ஆண்டுக்கு இரண்டு கோடி வீதம் ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள் 

    ஆனால் ஒருவருக்குக் கூட அரசு வேலை கிடைக்கவில்லை அம்மா ஆட்சி என்று கூறிக்கொண்டு தற்பொழுது ஆள்பவர்கள் எப்படி மக்களுடைய வரிப் பணத்தை தனதாக்கி கொள்வது என்று நினைத்து செயல்படுகின்றனர் மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றம் வரவேண்டும் தமிழக மக்களைப் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் சிந்தித்ததால் விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்துள்ளார் மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது  5o லட்சம் மகளிருக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டது போதும் என்று நினைத்து  உதயசூரியன் சின்னத்தை மனதில் நினைத்து 60 ஆண்டு காலம் உங்களுக்கு பரிச்சயப்பட்ட சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad