தாமரை மலராது - கருகி விடும் - கனிமொழி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் நாட்டை மதம், சாதி பெயரால் பிரித்து இந்த நாட்டில் அதிகாரத்தினை பயன்படுத்த நினைக்கும் மோடி அரசு, அவர்களுக்கு பினாமியாக செயல்படும் அதிமுக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல்,ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு காரணமாக தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.இதற்கு காரணமான மத்தியில் இருக்கும் மோடி ஆட்சி மற்றும் அவர் தாங்கி இருக்கும் அதிமுக ஆட்சி இருவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி நமக்கு நல்லது கிடைக்கும்,காலையில் எழுந்தால் உதயசூரியன் தான், ஆனால் தாமரை மலராது அதிலும் இந்த கடும் வெயிலில் தாமரை கருகி விடும் என்றார்
கருத்துகள் இல்லை