Header Ads

  • சற்று முன்

    8 வழி சாலையை எதிர்த்து பெரணமல்லூர் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    8 வழிச்சாலை திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மைதானங்கள் கண்டித்து, சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு: சேலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் ஆதரவு பெற்று 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 8 வழிச்சாலை திட்டம் தொடரும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
     செய்தியாளர்  திருவண்ணாமலை மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad