Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே சாய்பாபா திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி அம்பாள்,  ஸ்ரீ சாய் லிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா  வெகுசிறப்பாக இன்று  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி அம்பாள்,  ஸ்ரீ சாய் லிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, புண்யயாஹவாசனம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 


    இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள், மேள தளம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பூஜைகள் நடைபெற்றது. கோவிந்த பட்டர் தலைமையிலான குழுவினர் வேண்டிய பூஜைகளை செய்தனர். இதில் சாய்பாபா திருக்கோவில் நிர்வாகி வேலுச்சாமி; மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad