Header Ads

  • சற்று முன்

    விளாத்திகுளம் சட்டமன்றத் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார் சுயவிவர குறிப்பு


    விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி. ஜெயக்குமார் (49) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவர் 2015ஆம் ஆண்டு வரை விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட டி. சுப்பையாபுரம் அதிமுக ஊராட்சி கழக செயலராக இருந்தார்.  பின்னர் அதிமுகவிலிருந்து விலகி கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது விளாத்திகுளம் வருகை தந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் உறுப்பினராக இணைந்தார்.  அதனை தொடர்ந்து திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் பொறுப்பில் பணியாற்றினார். 

    தற்போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக உள்ளார். இவர் ஐ.டி.ஐ. கல்வி பயின்றுள்ளார்.  ரியல் எஸ்டேட் மற்றும் விவசாய தொழில் செய்து வருகிறார். 

    இவரது மனைவி பெயர் ஜெ. சங்கீதா. இவர்களுக்கு ஜெ. மாதவ கீர்த்திக், ஜெ. லக்ஷித் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெயக்குமாரின் தந்தை அ. சந்திரசேகரன் தூத்துக்குடி  மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயக்குமாரின் தாய் 
    சி. வள்ளியம்மாள் ஓய்வுபெற்ற ஆசிரியை.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad