திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சட்ட விழிப்புணாவு முகாம் நீதிபதி பாலமுருகன் தலைமையில், வழக்கறிஞர் சங்க மூத்த வழக்கறிஞர் சிவராமன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாகராஜன், சங்க செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்கள்.
இந்த முகாமில் திருவாடானை, தொத்தார்கோட்டை , மங்கலக்குடி கிராமங்களிலிருந்து மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலத்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது இந்த முகாமில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை