Header Ads

  • சற்று முன்

    மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு தரிசனம் மற்றும் அமர்வு தரிசனம் ரத்து


    திருவண்ணாமலை கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள், 5 மணி முதல் பகல் 12 மணிவரை அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். மாலை 6 மணியளவில், கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகிய இடங்களில் தீபங்கள் ஏற்ற பாதுகாப்பு கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.  மேலும், அன்றைய தினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 

    இதேபோல், மூலவர் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.  மகா சிவராத்திரியையொட்டி, திங்கள் காலை முதல் மறுநாள் காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் கோயில் ராஜகோபுரம் எதிரில் 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மகா சிவராத்திரியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோயிலில், பொது தரிசனம், கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

     திருவண்ணாமலை செய்தியாளர் .வி.முர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad