Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அருகே சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்: தம்பதியை தாக்கி ரூ.5 லட்சம் நகை பறிப்பு ,ரூ.10 லட்சம் கேட்டு கடத்த முயன்ற போது 2 பேர் சிக்கினர்*


    ஓசூர் தம்பதியை தாக்கி ரூ.5 லட்சம் நகையை பறித்த கும்பல் ரூ.10 லட்சம் கேட்டு அவர்களை காரில் கடத்த முயன்ற போது 2 பேர் பிடிபட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த பரபரப்பு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் (வயது 46). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபிரியா (39) நேற்றிரவு கணவன், மனைவி இருவரும் சொகுசு காரில் பெங்களூரு விமானநிலையத்திற்கு சென்று பின்  இருவரும் நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர், மாலூர் பாகலூர் சாலையில்  அவர்கள் வந்த போது மற்றொரு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சர்வேஸ்வரன் காரின் முன்புறமாக நிறுத்தினார்கள்.



    இதனால் நிலைகுலைந்த சர்வேஸ்வரன் காரை  நிறுத்தினார். காரின் கண்ணாடியை உடைத்த கும்பல் கத்தி முனையில் ஸ்ரீ பிரியா அணிந்திருந்த 16 பவுன் தங்க நகைகள், வைர நகை மற்றும் அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad