Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அருகே கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி : உடலை மீட்டு போலீசார் விசாரணை .


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபட்டி என்ற  இடத்தில் ரோஜா தோட்டத்தில் வேலை பார்த்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் 3  குழந்தைகள் குட்டையில் மீன் பிடிக்க சென்ற போது தண்ணீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மத்திகிரி  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர் அருகே குருபட்டி என்ற இடத்தில் ஸ்ரீனிவாஸ் என்பவருக்கு சொந்தமான ரோஜா தோட்டம் உள்ளது இங்கு 30க்கும்  மேற்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த ரோஜா தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வரும்  அஸ்ஸாம்  மாநிலத்தை சேர்ந்த முன்னா என்பவரது  மகன் பாபு (8) மற்றும் ராஜீ என்பவரது  மகன் அஜய் (12)  மகள் லட்சுமி (8) ஆகிய மூன்று சிறுவர்களும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி  குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கல்குவாரி குட்டையில் உள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக விழுந்து   மூழ்கி உயிரிழந்தனர்.

     குழந்தைகளை காணாத ராஜூவின் மனைவி அவர்களை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். பின்னர் கல்குவாரி குட்டையில் அவர்களை தேடிப்பார்த்தபோது அங்கு மூன்று பேரும் உயிரிழந்து தண்ணீரில் மிதந்து உள்ளனர் இதனையடுத்து அலறித் துடித்த அவர் இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  மத்திகிரி  போலீசார் மூன்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad