Header Ads

  • சற்று முன்

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நம்புதாளை பகுதியில் அரசு பேருந்தும் டாடா மேஜிக் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பாலி 3 பேர் படுகாயம்


    திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நம்புதாளை பகுதியில் டாடா மேஜிக் காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணம் செய்த 3 பேர் பலி. 3 பேர் பலத்த காயம்.

    இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நம்புதாளை பகுதியில் இராமநாதபுரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த டாடா மேஜிக் காரும், சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராத விதமாக திடீரென கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணம் செய்த 6 பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மீதமுள்ள மூன்று பேர் உயிருக்கு போராடிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தொண்டி போலீசார், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை காரில் இருந்து உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


    அதன் பிறகு சம்பவ இடத்தில் பலியான மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணையில், காரில் பயணம் செய்த 6 பேரும் இராமநாதபுரத்தில் சினிமா பார்த்து விட்டு, ஊருக்கு திரும்பி வந்தபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், விபத்தில் பலியான மூன்றுபேரும் தொண்டியைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் வயது - 23, செய்யது இப்ராஹிம் வயது- 30, மணக்குடியைச் சேர்ந்த கருப்பையா வயது - 29 என்பதும், பலத்த காயமடைந்த மூன்று பேரும் தொண்டியைச் சேர்ந்த முகம்மது ரிபிக் வயது - 23, முகம்மது சுப்ரித் வயது – 24, அஸ்பாக்-26 என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து தொண்டி இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை. 


    செய்தியாளர்: திருவாடானை - ஆனந்த் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad