Header Ads

  • சற்று முன்

    வறுமையின் காரணமாக புதுமண தம்பதிகள் தீ குளித்து தற்கொலைக்கு முயற்சி


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி கிராமத்தில் இரு வேறு மதத்தைச் சார்ந்த புதுமண தம்பதிகள் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் மகள் சஹானா பானு என்கின்ற பானு வயது 22, மற்றும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ராஜு மகன் பழனிசாமி வயது 30, ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில்  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.  கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். அவர்கள் இருவரும் தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணங்கூர் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 

    குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக அவ்வப்பொழுது இருவருக்கும் இடையே சண்டை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரண்டு பேரும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  அப்போது , இந்த இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் தீ காயங்களுடன் இருந்த இருவரையும் உயிருடன் மீட்பு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், இருவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    புதுமண தம்பதிகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : கிருஷ்ணகிரி - சி .முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad