Header Ads

  • சற்று முன்

    மயிலாடுதுறையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் - பொதுக்கூட்டத்தில் கூட்டம் இல்லாததால் ஆளும் தரப்பினர் அதிர்ச்சி


    மயிலாடுதுறையில் அதிமுக பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு.ஓ.எஸ். மணியன், ஆட்களே இன்றி, காலி நாற்காலிகளை பார்த்து உரையாற்றினார்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், அதிமுக சார்பில், மாண்புமிகு அம்மாவின் 71வது பிறந்தநாள் விழா சின்னக்கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்காமல் புறக்கணித்ததால், பொதுக்கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் பேச ஆரம்பிக்கும் பொழுது, மேடையில் அமர்ந்திருந்த கூட்டத்தின் அளவு கூட கீழே இல்லை. பொதுமக்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தை புறக்கணித்ததால், காலி நாற்காலிகளை பார்த்து அமைச்சர் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடமை தவறாது அமைச்சர் திரு.ஓ.எஸ். மணியன் காலி நாற்காலிகளை பார்த்து வீர உரையாற்றினார். மறைந்த அம்மா கட்டிக்காத்த கழகத்தை, பாஜகவிடம், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அடகு வைத்தால், அதிமுக தொண்டர்களும் கூட்டத்தை புறக்கணித்தனர்.

    வரும் மக்களவை தேர்தலில் ஈபிஎஸ் அணியின் நிலை இப்போதே பிரதிபலிக்கிறது என அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : நாகை - c. செல்வராஜ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad