Header Ads

  • சற்று முன்

    தமிழகம் காத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாள்


    திரையுலகிலும் சரி அரசியில் வாழ்விலிலும் சரி தன்னைக்கென்று ஓர் இடத்தை பிடித்து வாழத்தவர். சினித்துறையில் பிரவேசித்து அரசியலில் நின்று மறைந்தவர் தான் நம் முன்னாள் முதல்வர் என்றால் மிகையாகாது. சினி துறையை விட அரசியலில் பிரகாசித்தது சொல்லில் அடங்கா. போராடுவது என்றால் மிகவும் இவருக்கு பிடித்தமானது. வாழ்நாள் முழுவதும் போராடி போராடி சாதனைகள் பல கண்டவர். இதனால் மக்கள் இரும்பு பெண்மணி, அம்மா என பல புனை பெயர்களை மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர்.

    சிறு வயதிலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. வெண்ணிற ஆடை படத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.

    ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், தனிப்பிறவி, முகராசி, காவல்காரன் என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன. சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் ஜெயலலிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர். அம்மா என்றால் அன்பு என்ற பாடலைப் பாடி சிறந்த பாடகியாகவும் திகழ்ந்தார். 1980ல் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

    பல தேர்தல்களை சந்தித்தவர் 
    எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. என்ற இயக்கம் சில மாதங்கள் பிளவுபட்டு இருந்தாலும், சிந்தாமல் சிதறாமல் அதனை வலிமைப்படுத்தி ஒருங்கிணைத்தார். 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அபார வெற்றிபெற்று முதலமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் திட்டம் போன்றவை இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசியலை மையமாக வைத்திருந்தாலும், காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சித் தலைவர்களும், பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வந்தனர். ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை... இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றவர் அவர். துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராகத் திகழ்ந்தார். அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து மறைந்தவர் ஜெயலலிதா.

    ஆயினும், ஏழை மக்களுக்கான திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தி அவர்களின் நெஞ்சங்களில் உயர்ந்து நிற்கிறார் ஜெயலலிதா....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad