வாக்குரிமை விழிப்புணர்வு குறித்து ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருவண்ணாமலையில் தேர்தல் அலுவவகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை காந்தி சிலையிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தங்கசாமி , மற்றும் கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது இதில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் ஜனநாயக உரிமை என்பதை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடியும் வாக்களிப்பீர் ஜனநாயகம் காக்க என முழக்கங்கள் இட்டு ஏராளமான மாணவர்கள் ஊர்வலமாக வந்து பொதுமக்களிடையே விழ்ப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
கருத்துகள் இல்லை