Header Ads

  • சற்று முன்

    ரயில்வே மேம்பால பணிக்காக திருவண்ணாமலை - வேலூர் போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டுள்ளது


    திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை, போளூர் - வேலூர் சாலைகளில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி புதன்கிழமை (ஜனவரி 30) தொடங்குவதால், திருவண்ணாமலை, போளூரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடக்கும் வகையில், ஓர் மேம்பாலமும், போளூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடக்கும் வகையில் ஓர் மேம்பாலமும் கட்டப்படுகின்றன. இதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்குகிறது. எனவே, திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை - வேட்டவலம் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

    இதேபோல, வேலூரில் இருந்து போளுர் வழியாக திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் போளூர் நெடுஞ்சாலை (பைபாஸ்) சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.


    செய்தியாளர் :  திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad