பள்ளி மாணவி சாவு விபத்தா? தற்கொலையா ?
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலக்ஷ்மி இன்று சிறப்பு பயிற்சி வகுப்புக்காக சென்றிருந்தார். பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து விட்டார். சம்பவ இடத்திலே உயிர் பிரிந்தது. தகவல் அறிந்து துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு உடற் கூற்றாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். விபத்தா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மாணவி இறந்த தகவல் தெரிந்தவுடன் அப்பகுதியே பெரும் பரப்பாக உள்ளது. பெற்றோர்கள் மற்றும் பள்ளியே முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை