Header Ads

  • சற்று முன்

    குடிபோதையில் கத்தியால் தந்தையை குத்திய மகன் !


    கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அருகே சின்னபேலகொண்டப்பள்ளி கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக தந்தை அனுமந்தப்பாவை (70) மகன் முனிராஜ் (45) கத்தியால் குத்தியதில் தந்தை அனுமந்தப்பா உயிரிழப்பு.

    ஓசூர் அருகே சின்ன பேரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அனுமந்தப்பா இவர் ஓசூர் கால்நடை பண்ணையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற நிலையில்,
    சின்னபோளகொண்டப்பள்ளி யில் குடும்பத்துடன் வசித்து வந்தார் இவருக்கு 3 மகள்களும் நான்கு மகன்களும் ஒரே ஊரில் வாழ்ந்து வந்த நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்த நிலையில் அவரது மனைவியுடன் தனியாக வசித்துவந்தனர் அனுமந்தப்பா, ஓசூர் இரயில் நிலையம் அருகே தையல்கடை வைத்து நடத்தி வந்த தன்னுடைய இரண்டாவது மகன் முனிராஜ் மற்றும்  அனுமந்தப்பாவிற்க்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு இருந்த நிலையில் இன்று குடிபோதையில் தன்னுடைய கிராமமான சின்னபேௗகொண்டப்பள்ளி-க்கு சென்ற தன்னுடைய தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர், ஒரு கட்டத்தில் முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னுடைய தந்தை அனுமந்தப்பாவை உடலில் நான்கு இடங்களில் குத்தி உள்ளார் இதில் பலத்த காயம் அடைந்த அனுமந்தப்பா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார்,இதுகுறித்து ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இதற்கிடையில் தன் தந்தையை கொலை செய்த குடிபோதையில் இருந்த போலீசில் சரணடைந்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad