திருவாடானையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவாடானை தாலுகா, திருவாடானையில் கிராமங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட மாறுதல் வேண்டும், கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு மின்சாரம், கழிப்பறை வசதி செய்து தரவும் ஆன்லைன் சான்றிதழ் வழங்க கனினி, பிரிண்டர் மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாரா செயராளர் நம்புராஜேஸ் தலைமையில், திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ் முன்னிலையில் திருவாடானை தாலுகா அலுவலகம் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள், அப்போது தமிழக அரசை கண்டித்து கண்டண கோசங்கள் எழுப்பினார்கள். மேலும் எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக தெரிவித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
செய்தியாளர் : திருவாடானை லெ.ஆனந்த குமார்
கருத்துகள் இல்லை