நம்புதாளை தபால் அலுவலகத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் இயங்கி வரும் தபால் அலுவலகத்தை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அலுவலகத்தின் உள்ளே இருந்த 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், மற்றும் 46 ஆயிரம் பணத்தினை திருடிச்சென்றனர். வழக்கம் போல் இன்று வந்து அலுவலகத்தை பார்த்த போது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் புவனேந்திரன் தொண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இந்த சம்பவம் முன்விரோத காரணமா? அல்லது வேறு ஏதெனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோனத்தில் தொண்டி காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
செய்தியாளர் : திருவாடானை லெ.ஆனந்த குமார்
கருத்துகள் இல்லை