Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த தந்தை மற்றும் சிறுமியிடம் தவறாக நடந்த வாலிபர் கைது



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் பனையடிப்பட்டியை சேர்ந்த பவுன்சந்திரன் என்பவர் தனது 14வயது மகளை குடிபோதையில் பாலியல் தொந்தரவு செய்யதாக வந்த புகரை தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதே போன்று வேம்பார் பகுதியில் 10வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செல்வக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீசார் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் பனையடிப்பட்டியை சேர்ந்தவர் பவுன்சந்திரன். கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் மது போதையில் தினமும் வீட்டிற்கு வந்த தகராறு செய்வது மட்டுமின்றி, செல்போனில் ஆபாச படம் பார்க்கும் பழக்கமும் உடையவர் என்று கூறப்படுகிறது. இவருடைய 14வயது மகள் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு, விளாத்திகுளத்தில் உள்ள தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவுன்சந்திரன் வழக்கம் போல மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அவருடைய 14 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார். மது போதையில் இருந்த பவுன்சந்திரன் , தான் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையெடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தாய் இடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பவுன்சந்திரனின் மனைவி கோட்டையம்மாள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பின்பு போலீசார் விரைந்து சென்று பவுன்சந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பவுன் சந்திரன் மீது போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதே போன்று விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் செல்வகுமார் (27). இவர் மீது சூரங்குடி காவல்நிலையத்தில் கொலைவழக்கு திருட்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த 10வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தவே அருகில் இருந்தவர்கள் செல்வக்குமாரை பிடித்து, சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். செல்வக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    இந்த இரு சம்பவங்கள் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad