சீர்காழி கொள்ளிட அரசு நடுநிலை பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது
மாணவியர்களுக்கு தற்காப்பு கலை அரசே கற்றுத்தர ஆனையிட்டதையடுத்து ,சீர்காழி கொள்ளிட பகுதியில்,,புத்தூர் நடுநிலைப் பள்ளியில் இன்று 13.12.2018.அன்று முதன்மை கல்வி அலுவலர்,திருமதி.அமுதா ,மாவட்ட திட்டதற்காக அலுவலர் திரு.பீட்டர் பிரான்ஸிஸ் அவர்களின் வழிகாடுதலின் பேரில் தற்காப்பு பயிற்சி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,வட்டார கல்வி அலுவலர், திரு.செல்வம் , திரு.பாபு, மற்றும், வட்டார வள மைய மேற்ப்பார்வையாளர், திருமதி பூங்குழலி, ஆசிரியர் பயிற்றுநர். திருமதி. பாக்கியலட்சுமி, நடுநிலை பள்ளி புத்தூர் தலமையாசிரியர். திரு.சண்முகவேலு ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் டேக் வொன் டோ i பயிற்ச்சியாளர் மாஸ்டர் நாகராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு,மாணவியர்களுக்கு பயிற்ச்சி யளித்தார். திரு.உதயகுமார்,திரு.சரவணன், திரு.செல்வக்குமார் ,ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் :செல்வராஜ் - நாகை மாவட்டம்
கருத்துகள் இல்லை