Header Ads

  • சற்று முன்

    CSC கம்ப்யூட்டர் எடிகேஷன் சார்பில் ரத்ததான முகாம்


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் CSC கம்ப்யூட்டர்  எஜுகேஷன் சார்பில் CSC நிறுவனத் தலைவர் அய்யம்பெருமாள் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நன்மை பயக்கும் வகையில் ரத்த தானம் செய்தனர். இம்முகாமில் மூர்த்தி (சிஎஸ்சி  நிறுவன மேலாளர்) தலைமை வகித்தார். 


    திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் முன்னிலை வகித்தார். AGS செந்தில்குமார்   மற்றும்   வெங்கடேசன், ஜெய்சங்கர், சிவானந்தம் கும்பகோணம் வங்கி அலுவலர்கள், கண்ணன் பேப்பர் மார்ட் நிறுவனர். ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான ரத்ததான முகாமின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும்  நன்மையை எடுத்துரைத்தனர்.பின்பு சிஎஸ்சி மாணவ மாணவிகள்,ஓப்போ செல்போன் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் போன்றோர் ரத்த தானம் அளித்தனர் இம் முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : முத்துக் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad