Header Ads

  • சற்று முன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவாடானை தாலூக்காவிலிருந்து வட்டாச்சியர் மூலம் நிவாரனை பொருட்களை அனுப்பி வைத்தனர்


    கஜா பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவாடானை தாலுகாவில் இருந்து பல்வேறு தரப்பினர்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களை வட்டாட்சியர் மற்றும்  முன்னால் மாவட்ட செலாளர். மாவட்ட கவுன்சிலர் ஆணிமுத்து  இன்று  அனுப்பி வைத்தார்

    திருவாடானை தாலுகா திருவாடானை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களும் வியாபாரிகளும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர் இதில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ரூபாய் 50,000 பெறுமானமுள்ள அரிசி துணிமணிகளையும் அதேபோல் வியாபாரிகள், பொதுமக்கள், தன்னார்வார்கள், ஜமாத்தார்கள், காரணம்  அரிசி மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, போர்வை துணிமணிகள் என ரூபாய் 5 லட்சத்து 30 ஆயிரத்து 880 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை வழங்கினர் இதுகுறித்து திருவாடானை தாசில்தார் சேகர் கூறியபோது கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் நகல் வழங்கிக்கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் இயன்ற பொருட்களை வழங்க கேட்டுக் கொண்டிருந்தார் அந்த நேரம் வட்டாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன்வீட்டிற்கு சென்று அரிசி ஒரு மூடையை தனது சைக்கிளில் வைத்து கைக்குழந்தையை மற்றும் தனது குழந்தையுடன் கொன்டு வந்து நிர்வாக அலுவலகம் வழங்கினார் அந்த காட்சி மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது என கூறினார் பொதுமக்களும் பல்வேறு தரப்பில் உதவிகளை செய்து வருகிறார்கள் இந்த பொருட்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோர் திருவாடானை தாலுகா அலுவலகத்தை எந்த நேரத்திலும் அணுகி அதிகாரிகளிடம் பொருளாகவோ பணமாகவோ வழங்கலாம் என தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad