மாவட்ட ஆட்சியரை அலட்சியபடுத்தும் ஆலய நிர்வாகிகள்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பாத்தியப்பட்ட தூண்டுகை விநாயகர் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள இந்த கோவிலில் அபிஷேக கழிவுநீர் வடிகாலுக்காக உறை கிணறு அமைக்கப்பட்டு அது நிறைந்து சன்னதி தெருவில் வழிந்து செல்கின்றது.
இந்த கழிவுநீர் கடந்த ஆறு வருடங்களாக அகற்றப்படாமல் உள்ளது இதனால் பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது . சமீபத்தில் கந்தசஷ்டி விழாவிற்காக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி நேரடியாக பார்வையிட்டு கோவில் அதிகாரிகளுக்கு இந்த கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார் 10 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாமல் கழிவுநீர் சாலையில் சென்று கொண்டு இருக்கிறது இதனால் கந்தசஷ்டி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு டெங்கு காய்ச்சல் சிக்கன் குனியா மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை