Header Ads

  • சற்று முன்

    இளம் ஆசிரியை நடுரோட்டில் கழுத்தறுத்து படுகொலை.


    கும்பகோணத்தில் பட்டப்பகலில் இளம் ஆசிரியை மர்மமான முறையில் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

    பாபநாசம் 108 சிவாலயம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசந்த பிரியா வயது 24. இவரின் தந்தை டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று மாலை பள்ளி முடிந்ததும் அவர் பாபநாசம் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது  திடீரென வந்த செல்போன் அழைப்பின் பேரில் அவர் மயிலாடுதுறை சாலை உமா மகேஸ்வரபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் மர்மமான முறையில் தொண்டையில் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி  ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் இறந்து கிடந்தார். உடனே கொலையை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட வசந்த பிரியாவின் உடலை போலீசார் கைப்பற்றி கும்பகோணம் மருத்துவமனைக்கு மருத்துவ உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வசந்த பிரியாவுக்கு கடந்த வாரம் தான் வலங்கைமானை சார்ந்த ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் பள்ளிக்குச் செல்வதற்காக காலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து பாபநாசம் கடைவீதியில் உள்ள வாகன நிறுத்தம் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் பேருந்தில் தான் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.


    இந்நிலையில் ஆசிரியை வசந்தப்ரியா பணி முடிந்து வீடு திரும்பும்போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் நால்ரோடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக வசந்த பிரியாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை வைத்தும் ,அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் கும்பகோணம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - கதிரவன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad