Header Ads

  • சற்று முன்

    மீன் கழிவுகளால் சுற்று சூழல் பாதிப்பதுடன் நிலத்தடி நீர் பாதிக்கிறது. நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்


    நெல்லை மாவட்டம் இருக்கன்துறை அருகில் உள்ள ஊரல்வாய்மொழி ஓடை பகுதிகளில் மீன் ஆலைகளில் இருந்து வரும் மீன் கழிவுகளை லாரிகளின் மூலம் கொட்டுவதினால் பயங்கர தூர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. 

    இதனால் சுற்று சூழல் பாதிப்பதுடன் நிலத்தடி நீர் பாதிக்கிறது. மேலும் மழை காலம் என்பதால் இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் , சுகாதாரதுறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


    செய்தியாளர் : திருநெல்வேலி - மோகன் ராஜ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad