Header Ads

  • சற்று முன்

    கணவனை கொன்ற கள்ள காதலன்


    கமுதி செட்டியார் பஜாரில் ஜவுளி கடை நடத்தி வந்தவர் ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஜெயராமன் (37) இவரது மனைவி பொன்னுமணி (23) இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடுநசியில்  வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுளைந்த மர்மநபர், தூங்கிக்கொண்டிருந்த ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். படுகாயம் அடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கூக்குரல் கேட்டு மாடியில் தூங்கிய அவரது மனைவி ஓடிவந்து கதறி அழுதுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

    தகவலறிந்த கமுதி துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தேவசங்கரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. பொன்னுமணிக்கும் எதிர் வீட்டில் வசித்து வந்த செல்வராஜ் மகன் அசோக்குமாருக்கும் திருட்டுத்தொடர்பு இருந்துள்ளது. இதை கணவர் கண்டித்ததால் அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் ஜெயராமனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கணவர் வீட்டின் ஹாலில் தூங்க சென்றதும் திருட்டுக்காதலன் திட்டப்படி கதவை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு பொன்னுமணி மாடியில் சென்று படுத்துக்கொண்டார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அசோக்குமார் நல்லிரவில் வீடு புகுந்து வெட்டியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து கொலையாளி அசோக் குமாரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் அவர் மதுரை அண்ணாநகர் போலீசில் சரணடைந்துள்ளார். அவரை கொண்டு வருவதற்காக கமுதி போலீசார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

    செய்தியாளர் : தங்கம் பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad