Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி அட்டை கம்பெனி தொழிலாளி பலி



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கரடிகுளத்தினை சேர்ந்த தடிவீரன் என்பவரது மகன் மாயகிருஷ்ணன்(45). இவர் பழங்கோட்டையில் அட்டை கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றிவந்துள்ளார். இவர் தினந்தோறும் கூழைத்தேவன்பட்டியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், குளித்து, வேலைக்கு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

    இந்நிலையில் இன்று காலையில் மாயகிருஷ்ணன் குளிக்க சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த உடன் பணியாற்றுபவர்கள், அவர் வழக்கமாக குளிக்கும் கிணற்றில் சென்று பார்த்த போது வெளியில் ஆடைகள் கிடந்துள்ளது. ஆனால் அவரை காணவில்லை என்றதும் கிணற்றில் உள்ள நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகமடைந்தவர்கள் உடனடியாக கழுகுமலை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளர். தீயணைப்புத்துறையினர் விரைந்து கிணற்றி இறங்கி தேடிய போது, மாயகிருஷ்ணன் உடல் கிடைத்தது. தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாயகிருஷ்ணனுக்கு, ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாகவும், குளிக்கும் போது, வலிப்பு வந்து கிணற்று நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று  கூறப்படுகிறது.

     செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad