Header Ads

  • சற்று முன்

    பல கோடி மதிப்பிலான மரகதசிலை திருட முயற்சி : தடுக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு



    ராமநாதபுரம் அருகே திரு உத்திரகோசமங்கையில் மிகவும் பழமையான கோவில் உள்ளது. இங்கே பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலையை மர்ம கும்பல் ஒன்று திருட திட்டமிட்டு கோவிலுக்குள் நுளைந்துள்ளது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த
    காவலாளி செல்லமுத்து (62 ) என்பவர் தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை அரிவாளால் தலையில் வெட்டியதில் படுகாயமடைந்தார். இந்நிலையில் கோவிலிலுள்ள எச்சரிக்கை அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். காயமடைந்த முதியவர்  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரு உத்திரகோச மங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையை கடத்த காவலாளியை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad