கஜா புயலின் தாக்கம் கண்ணிற்கு சிக்காத விழுந்தமாவடி கிராமம்
நாகபட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் விழுந்தமாவடி அதனை சுற்றி கிராமங்களான பூவை தேடி, காமேஸ்வரம்,புது பள்ளி, வேட்டைக்காரர் நெருப்பு, வானவன் மாதேவி என ஒட்டுமொத்த கிராமத்தில் சுமார் 5000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் வாழ்வாதாரம் தென்னை, மா, முந்திரி, புளியை பிரதான தொழிலாக கொண்டு வசித்துவந்தனர். தற்போது இந்த கஜா புயலின் தாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடு இழந்து உண்ண உணவின்றி, மின்சார வசதியின்றி, இங்கு வசிக்கும் மக்கள் திண்டாடுகின்றனர். 200க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர். இதுவரை அரசு எந்தொரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை தன்னார்வ தொண்டு நிறுவனமும் வராதது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது.
திட்டத்தட்ட 50 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தன்னரவ தொண்டு நிறுவனம் தொட்ர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9500949700 தொட்ர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை