Header Ads

  • சற்று முன்

    காதல் ஜோடி ஆணவக்கொலை : கொலையாளிகளுக்கு வலை


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சூடு கொண்ட பள்ளி பகுதியை சேர்ந்த நந்திஷ் (24) மற்றும் சுவாதி (20) இவர்கள் இரு வீட்டாரை எதிர்த்து மூன்று மாதங்களுக்கு பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அதன் பிறகு ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. திருமணம் முடிந்த நிலையில் ஓசூரில் வேலை பார்த்து வந்துள்ளார்,

    இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நந்திஷ் தம்பி சங்கர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் தன் அண்ணன் நந்திஷ் மற்றும் அண்னி சுவாதியும்  கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட  நிலையில், கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகளான புதுமண தம்பதிகள் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி கிராமத்தின் அருகே சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் அவர்களின் உறவினர் கிருஷ்ணன் என மூன்று பேரை கர்நாடக பெலக்வாடி போலீஸார், தமிழக போலீஸாரின் உதவியுடன் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை தீவிரமாக தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் அருகே ஆணவக்கொலை செய்த அனைத்து கொலையாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஓசூர் தமிழ்நாடு ஓட்டல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad