மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பத்து அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையேற்று 3088 மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இவ்விழாவில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், காஞ்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்ச்செல்வம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் விஜயரங்கன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : தங்கம் பாலு
கருத்துகள் இல்லை